காதலாகி
உன்னைப் பார்க்காத தருணங்களில்
உயிர் இல்லா உடலாகி....
நீ அருகினில் இருக்கையில்
உடல் மறந்த உயிராகி....
எப்போதும் உன் நினைவாகி
உறக்கம் மறந்த நிலையாகி
உண்ண மறுத்த பொழுதாகி
சொல் மறந்த அறிவாகி.....
எப்படியெல்லாம் ஆகி விட்டது என் இயக்கம்,
உன்னில் காதல் ஆகி போனதனால்.....