​இரக்கம் காட்டிடுவோம் ​

​ஐந்தறிவு உயிரினம் என்றாலும்
வாழத்தான் பிறந்தேன் நானும் !
அறிந்தும் ஆறறிவு படைத்தவரே
புரிந்தும் பாவங்கள் செய்வதேன் !
கொன்று கூறாக்கி உணவாக்கி
தின்றுக் கொழுப்பதும் நீதிதானா !

பிராணிகள் என்றாலே கேவலமா
பிரியாணி ஒன்றுதான் குறிக்கோளா !
பாசமுடன் வளர்த்திடும் வேடர்களே
பரிமாறி விருந்துண்பதே நோக்கமா !
பண்டிகை உங்களுக்கு கொண்டாட்டம்
பரிதவிக்கும் எங்களுக்கு திண்டாட்டம் !

சிந்திப்பீர் சிந்தையும் உள்ளோரே
உதறி தள்ளாதீர் வேண்டுகோளை !
அசைவம் தவிர்ப்பீர் இனியேனும்
வாழ்ந்திட நாங்களும் வையத்தில் !
--------------------------------------------
( பிரியாணி என்பது தமிழிலும்
ஆங்கிலத்திலும் ஒன்றே )
----------------------------------------------
பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (7-Oct-16, 6:55 am)
பார்வை : 196

மேலே