சந்தன விநாயகர் - நேரிசை வெண்பாக்கள் மறு பதிவு
சந்தன நல்வினாய கன்தாள் வணங்கிட
எந்தவித சங்கடமும் நம்மையே - சந்ததமும்
அண்டாதே; உண்மையிது எந்நாளும் அன்னவனை
தண்டனிட்டு நித்தம் தொழு! 1
எந்நாளும் சந்தன நல்வினாய கன்தாளை
பந்தமொடு பாடிப் பரவிடவே - சந்தேகம்
ஏதுமுண்டோ? நல்வளங்கள் எல்லாம் நமக்கேதான்
தோதாகத் தந்திடுவான் தேறு! 2