வாழு, வாழ விடு

வாழுமட்டும் நன்மைக்காக,
நம் நன்மைக்காக மட்டுமல்ல
தீமை யாருக்குமே வராதவகையில்
வாழ்தலே சிறப்பு!

ஒவ்வொரு அடியும் எடுத்து வைக்கையில்
தீர்மானமாக மிக மிக திடமாக...

நாய் குரைத்துக்கொண்டே துரத்தினாலும்
நின்று நாயையே உற்றுப்பார்த்தால் போதும்,
நாயும் திரும்பிப்போய் விடும், நம்மைப்பிடித்த
சனியும் நம்மை விட்டு விடும்.

திருஷ்டி மட்டும் நம் மீது விழாமல்
பார்த்துக்கொள்ள வேண்டும்,
நாம் சாண் ஏறினால் முழம் இறங்க வைக்க
சிலர் இங்கே நம்மை கண் கொட்டாமல்
பார்ப்பதை உணர பிடரியில் கூட ஒரு கண் வேண்டும்.

கலகலப்பாக பேசுங்கள், கண்டுக்காமல் முன்னேறுங்கள்
காலம் உங்களுக்காக கைம்மாறு செய்ய காத்திருக்கும்,
சொந்தங்கள் எல்லாம் சுகத்தை தான் பங்கு போடுவார்கள்,
சோகத்தை பங்கு போடும் சிலர் இருந்தால்
அதிர்ஷ்டசாலி தான் நீங்கள்!

நட்பு செலவு வைக்கும், செலவும் சில நேரம் செய்யும்,
ஆனால் நன்மையென்று ஒன்றுமே இருக்காது.
ஆடம்பரம் கேளிக்கைக்காக அள்ளித்தெளிக்க
ஆயிரமாயிரம் பேர், அவர்களிடமிருந்து ஒதுங்குங்கள்.

உங்களைப்போல் முனைப்புடன் ஜாக்கிரதையுடன்
வாழ்க்கையை அணுகுபவர் இங்கே மிகச்சிலரே!

சும்மா ஜாலி என்று சொல்லித்திரிபவர்கள்
வாழ்க்கையில் வெற்றி பெற துடிப்பதைவிட
வர்ணஜாலத்தில் வேடிக்கை காண்பவர்கள் மட்டுமே!

உங்களைப்போல்
நீங்கள் மட்டுமே என்றுணர்ந்தாலே போதும்,
வெற்றியின் இலக்கு
உங்கள் விழியில் புலப்படும்.

எழுதியவர் : செல்வமணி (24-Oct-16, 8:47 pm)
பார்வை : 1416

மேலே