உனக்காக

இதை எழுதும் ஒவ்வொரு நொடியிலும்
எந்தன் நினைவினில் நின்று என்னை
எதையும் செய்யவிடாமல் வென்றுகொண்டிருக்கிறாய்.

இப்படி நாள் முழுவதும் பெருவாரியான
மணித்துளிகளில் உந்தன் நினைவுகளுடன்
நான் உறவாடிக்கொண்டுதான் இருக்கின்றேன்.

உன் அகத்தோற்றத்தையும் அங்க அசைவையும்
வைத்தே உன்னில் வீழ்ந்தவன் நான். - உன்
மனதையும் என் பக்கம் திருப்பிவிடு நான்
எப்பொழுதும் வீழ்ந்தே கிடந்துவிட்டுப் போகின்றேன்.

இப்படி உந்தன் நினைவுகள் என்னுள்
ஊசலாடிக் கொண்டிருப்பதையே காரணம்காட்டி அதை
காதலென உன்னிடம் சொல்ல விரும்பவில்லை.

நான் பொறுத்தே இருக்கிறேன் உந்தன்
விழிகளில் இருந்து என்னையும் விரும்புகிறாய்
என்ற எண்ணத்துடன் பார்வைகள் வரும் வரை.

ஒருவேளை உனது விழிகளில்
என்மீதான அன்புக்குன்டான அறிகுறிகள்
ஏதும் தென்படவில்லையெனில்
நான் மறைத்தேவைக்கிறேன்
உந்தன் மீதான எந்தன் உணர்வுகளையும்
உனக்காக நான் எழுதிய எழுத்துக்களையும்.

காத்திருக்கிறேன் உனது பார்வைகளுக்காக
அவை என்னுடன் என்ன பேசப்போகிறதென்று.

எழுதியவர் : சிவராமகிருட்டிணன் (22-Nov-16, 7:21 pm)
Tanglish : unakaaga
பார்வை : 226

மேலே