இணை பிரியா அன்றிலாய் இசைக்கிறேன் இதய கீதம்
இணை பிரியா அன்றிலாய்
இசைக்கிறேன் இதய கீதம்
++++++++---++++++++-----+++++
மார்கழித் திங்கள் நிறைமதி
மனமகிழ் தன்மதி ஒளியிலே
இளம் காலைப் போதில்
வெண் பனிப் பொழிவிலே
நனையும் மலர் போலே
உன் குளிர் பார்வையிலே
நனை கொள் நினைவுகள்
என் சீர்கெழு சிந்தையுள்ளே
வனைந்தது புனைந்தது
நனைந்தது நிறைந்ததுவே!
உலகைத் தழுவ பரந்து பரவும்
ஒளிக் கதிர் போலே
என் உள்ளே நிரைந்து பரவும்
ஆர் உயிர் ஆனாய் நீயே!
என் உயிர் மீட்டியே
ஏற்றினாய் காதல் தீபம்!
இணை பிரியா அன்றிலாய்
இசைக்கிறேன் இதய கீதம்
என் உயிர் தேடிய
கண்மணி ராணி நீயே
இனிய காதல் தேவதையே
இதயத்தில் பொதிந்தனையே
இந்நாளும் எந்நாளும்
என் விலையில்லா நிதியமே!