உழைப்பிற்கு வயதில்லை
உழைப்பிற்கு வயதில்லை
------ உரிமைக்கும் இடமுண்டே.
தழைக்கின்ற சந்ததிகள்
------ தரமான உழைப்பிற்கே
பிழைப்புண்டு என்றதொரு
------ பிசகாத உண்மையினை
மழைபோலே நம்பிடுவீர்
------ மங்காதே உலகினிலே !
வழக்கங்கள் பழமொழிகள்
------ வாசமுடன் சொல்லுகின்ற
பழக்கங்கள் பண்புடைய
------- பாசமிகு நீதிநெறி !!!
ஆக்கம் :- கவிஞர் . சரஸ்வதி பாஸ்கரன்