கற்பகமே வாராய்

திருமயிலைப் பதியினிலே திருமுகத்தைக் கண்டேன்
***திகட்டாத காட்சியிலே சிலிர்த்தேநான் நின்றேன் !
அருள்வேண்டி அனுதினமும் அவள்பாதம் பணிந்தேன்
***அன்னையவள் ஆசியினால் அன்புமனம் கரைந்தேன் !
இருளகற்றி ஒளிகொடுக்கும் இனியவளின் கண்கள்
***இறுமாப்பை அகற்றிடவே இன்பநிலை உணர்ந்தேன் !
கருணையுடன் காத்தருள கற்பகமே வாராய்
***கனிவுடனே ஆதரித்துக் கடைகண்ணால் பாராய் !!

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (28-Jan-17, 6:47 pm)
சேர்த்தது : Shyamala Rajasekar
பார்வை : 62

மேலே