பெண் மனம்
என்னவனின் அன்புக்கு
அடிமையான நான்
ஏனோ இன்று
அவனை பிரிந்து
கண்ணீருடன்
கைகுலுக்கி கொண்டிருக்கிறேன்
முடியாத கனவுகளாய்
விடியாத இரவுகளாய்
நீள்கிறேன்
விடிந்தும் பயனில்லை
வெறும் கனவுகள் தான்
நிஜங்களை
இழந்து விட்ட நான்
நெருப்பாய் எரியும்
நினைவுகளோடு
சுற்றி திரிகிறேன்
தினம் உன்னை கானத் துடிக்கும்
என் கண்களோ தோல்வியை
தழுவிக் கொண்டே போகிறது
கையில் அல்ல முடியாத
கானல் நீராய்
தேங்கிக் கிடக்கும் என்னை
கடந்து போய் விடாதே.!
காணாமல் போய் விடுவேன்.!