திருநங்கை

கருப்பைச் சுமக்காத தாய்மையும்
கூடிக் கலவாத ஆண்மையும்
கலந்து பிறந்த இடையினம்
எழுத்துப் பிழைதான்
எங்கள் பிறப்பு
எங்கள் கருத்தில்
என்றுமில்லை பிழை
களையாய் நினைத்து
களைந்து விடாதீர்
மாற்றுப் பயிராய்
செழிக்க விடுங்கள்
உலகமே தள்ளிப் போக
உயிர் கொல்லி வைரசா நாங்கள்
அள்ளிக் கொஞ்ச அன்னையில்லை
தட்டிக் கொடுக்கத் தந்தையில்லை
கள்வனுக்கும் உறவுண்டு எங்களுக்கோ
கொள்ளியிடவும் யாருமில்லை
ஒரு பார்வை ஒரேயொரு பார்வை
வாஞ்சையோடு பாருங்கள்
வளர்ப்பு நாயாய்
வீழ்ந்திருப்போம் காலடியில்
இறைவா உன்னிடம்
ஒரு யாசகம்
படைப்பைத் திருத்திவிடு
இல்லையேல்
படைப்பவனை மாற்றிவிடு!

எழுதியவர் : லட்சுமி (24-Mar-17, 9:53 pm)
சேர்த்தது : Aruvi
Tanglish : thirunangai
பார்வை : 1113

மேலே