இது தான் காதலா
என் உயிரின் மீது உன்
உணர்வுகளின் சாயல்
இன்று நீயாக நானானேன்
என் விழிகளின் ஓரம்
உனது பிம்பத்தின் மாயம்
இமை மூடாமல் சிலையானேன்
இது தான் காதலா??
இந்த நொடி எனதில்லை
எழும் காட்சிகளும் நினைவில்லை
காற்றும் கூட துணையில்லை
எனது மூச்சாகி நீ நின்றாய்...
காதலே வந்து ஏற்றுக்கொள்...