ராஜ் சரண் - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : ராஜ் சரண் |
இடம் | : திருச்சி |
பிறந்த தேதி | : |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 04-Jun-2016 |
பார்த்தவர்கள் | : 103 |
புள்ளி | : 13 |
சொல்வதற்கெதுவுமில்லை
போராடும் குணமிருந்தால்
போர்க்களமும்
உன் தெருவாகும்...
பொதுநலம் கொஞ்சம் கலந்திருந்தால் உன் தெருகூட பூந்தோட்டமாகும்...
தயக்கங்கள் உன்னை
முடக்கித் தனியறையில்
சிறை வைப்பதா?
வருங்கால சந்ததிக்கு
உனது வரலாற்றில் நீ
குறை வைப்பதா?
வானம்தான் உன்
எல்லையென்றால் அதையும்
தான் பார்த்துவிடு...
தடமெல்லாம்
தடையென்றால்
தகர்த்தெறிந்து வீசிவிடு...
போகுமிடம் புதியதுதான்
நாளைஅது உன்
கால்தடத்தின் முகவரிதான்...
தோல்விகள் உன்னிடம்
துவலும் வரை
முயற்சியால் மட்டும்
மூச்சு விடு...
சோர்வுகள் வாழ்வினை சிதைத்தாலும்
ஓய்விலும் வெற்றியை
நினைத்தே இளைப்பாறி விடு...
ஆயிரம் வாய
இலட்சியங்கள் உள்ளவரை
வரும் தோல்வியெல்லாம் தோல்வியில்லை...
இலட்சியத்தின் முதற்படி முளைக்கும் முயற்சி
என்ற சிறு செடிதான்...
வேரினைப் போலத் தேடிப் போ
உன் கனவுகள் என்றும்
நீரூற்றைப் போல்
தண்டினைப் போல
நிமிர்ந்து நில்
உன் சுமகளை எல்லாம்
சுமந்து நில்
இலைகள் உதிரந்துன்னை
ஏமாற்றலாம்
பாரம் குறைந்ததென்று
மகிழ்ந்திடு
தனியே நீ மட்டும் தழைத்திடு...
வெட்ட வெட்ட
வளர்ந்திடுவேன்
என்ற வீர வசனம் பொழிந்திடு..
உன் வளர்ச்சிக்குக்
காலங்கள் இரையாகலாம்
என்றும் நீ வளராமல் மட்டும்
இரையாகிடாதே...
வெற்றிக்கு அருகில்
நீ நிற்கும் நாளில்
உன் மீது மலர்ந்த பூக்களெல்லாம்
என் உயிரின் மீது உன்
உணர்வுகளின் சாயல்
இன்று நீயாக நானானேன்
என் விழிகளின் ஓரம்
உனது பிம்பத்தின் மாயம்
இமை மூடாமல் சிலையானேன்
இது தான் காதலா??
இந்த நொடி எனதில்லை
எழும் காட்சிகளும் நினைவில்லை
காற்றும் கூட துணையில்லை
எனது மூச்சாகி நீ நின்றாய்...
காதலே வந்து ஏற்றுக்கொள்...
என் காதல்
தந்த ஓவியமே-நீ
அசைந்திடும் முப்பரிமாண காவியமே...!
அழகுக்குப் பிறந்தவளே
அனிச்சையாய் எனை
ஆட்டிப் படைத்தவளே...!
என் கனவில் வந்த
கற்பனையே
அது முதலே
நான் உனக்கு அற்பனையே...!
காட்சியோடு தேவதையே
வரமும் கூட தந்துவிடு
ஆகிடுவேன் நானும்
உந்தன் பாதுகையே...!
என் விழிகளையே உளியாக்கி
தண்ணீரிலும் உனைச்
செதுக்கி சிற்பமாய்
நான் வடிப்பேன்...!
காற்றைக் கூடச்
சேகரித்து உன் உருவத்தை கலையாது அதில்
பொதிப்பேன்...!
மேகத்தைச் சிறை பிடித்து
ஊசியிலே அதை நுழத்து
வெண்ணிற ஆடையுனக்கு செய்திடுவேன்...!
விண்மீன்களைக் களவாடி
என் உயிரிலே அதைக் கோர்த்து
அணிகலனாய் உனக்கு
என் காதல்
தந்த ஓவியமே-நீ
அசைந்திடும் முப்பரிமாண காவியமே...!
அழகுக்குப் பிறந்தவளே
அனிச்சையாய் எனை
ஆட்டிப் படைத்தவளே...!
என் கனவில் வந்த
கற்பனையே
அது முதலே
நான் உனக்கு அற்பனையே...!
காட்சியோடு தேவதையே
வரமும் கூட தந்துவிடு
ஆகிடுவேன் நானும்
உந்தன் பாதுகையே...!
என் விழிகளையே உளியாக்கி
தண்ணீரிலும் உனைச்
செதுக்கி சிற்பமாய்
நான் வடிப்பேன்...!
காற்றைக் கூடச்
சேகரித்து உன் உருவத்தை கலையாது அதில்
பொதிப்பேன்...!
மேகத்தைச் சிறை பிடித்து
ஊசியிலே அதை நுழத்து
வெண்ணிற ஆடையுனக்கு செய்திடுவேன்...!
விண்மீன்களைக் களவாடி
என் உயிரிலே அதைக் கோர்த்து
அணிகலனாய் உனக்கு
கண்களால்
கடத்தி என்னை
இதயத்தில் பதுக்கிவிடு...
கையோடு கை கோர்த்து
உடல் உஷ்ணத்தை
உயர்த்தி விடு...
இதழ் யுத்தம்
தொடங்கும் முன்னே
முதல் முத்தம் நெற்றியிலே...
சரிந்து விழும்
உன் முடியைக் காதோரம் ஒதுக்கிடவா?
என் இதழால் உன்
அழகை நான் கொஞ்சம் செதுக்கிடவா?
உன் மார்பில்
ஒழிந்திடவே ஒரு
யுகமாய்க் காத்திருந்தேன்...
இது தான் முதலிரவா
முதல் முறையாய்
வியர்த்திருந்தேன்...
நிலவொளியைக்
கடன் வாங்கி
உன் அழகை ரசிப்பேனே...
உன்னாடையைப்
பரிசலித்து நிலவின்
கடனை முடிப்பேனே...
உன் மேனியை
நான் தழுவி ஏழிசையை மீட்டெடுப்பேன்...
அறு சுவையும்
உன்னிடத்தில் ஒருசேர அறிந்த
கண்களால்
கடத்தி என்னை
இதயத்தில் பதுக்கிவிடு...
கையோடு கை கோர்த்து
உடல் உஷ்ணத்தை
உயர்த்தி விடு...
இதழ் யுத்தம்
தொடங்கும் முன்னே
முதல் முத்தம் நெற்றியிலே...
சரிந்து விழும்
உன் முடியைக் காதோரம் ஒதுக்கிடவா?
என் இதழால் உன்
அழகை நான் கொஞ்சம் செதுக்கிடவா?
உன் மார்பில்
ஒழிந்திடவே ஒரு
யுகமாய்க் காத்திருந்தேன்...
இது தான் முதலிரவா
முதல் முறையாய்
வியர்த்திருந்தேன்...
நிலவொளியைக்
கடன் வாங்கி
உன் அழகை ரசிப்பேனே...
உன்னாடையைப்
பரிசலித்து நிலவின்
கடனை முடிப்பேனே...
உன் மேனியை
நான் தழுவி ஏழிசையை மீட்டெடுப்பேன்...
அறு சுவையும்
உன்னிடத்தில் ஒருசேர அறிந்த
நினைவுகளால் தொடர்வேன்
நித்தம் நினைத்துக்
கொண்டே வாழ்வேன்...
நீ
சிரித்ததைச்
சித்திரமாக்குவேன்...
உந்தன்
அழுகையையும்
அழகாக்குவேன்...
உனதன்பை
எனக்குள் தினமும்
வரவு வைப்பேன்...
அதில் நொடிக்கும்
வட்டிகளை நான்
கூட்டுவேன்...
நீ என்னுடன் இருந்த நாட்கள் ஒவ்வொன்றையும் கொண்டாடும் விழாவாக்குவேன்...
நீ இல்லாத நாட்களுக்கு
கற்பனையை எனக்குள் விதையாக்குவேன்...
நீ தந்த முத்தங்களை
எண்ணி என்னை நானே புனிதமாக்குவேன்...
நீ தந்த வலிகளை
எண்ணியே என்னை வலிமையாக்குவேன்...
உந்தன் காதலை
எனக்குள் காமமும்
ஆக்குவேன்...
எந்தன் பசிக்குக்
காதலை இரையும்
ஆக்குவேன்...
ஊமைகள் பேசும்
மொழிதானா?
என் காதல் எப்போதும்...
புரிய வைக்க திணறிப் போகின்றேன்...!
குருடர்கள் தேடும்
வழிதானா?
என் காதல் எப்போதும்...
வழி(லி,ளி)யோடு நானும் தொலைந்தே போகின்றேன்...!
செவிடர்கள் கேட்கும்
இசையும் தானா?
என் காதல் எப்போதும்...
அர்த்தமற்று அலையப் போகின்றேன்...!