முதலிரவு

கண்களால்
கடத்தி என்னை
இதயத்தில் பதுக்கிவிடு...

கையோடு கை கோர்த்து
உடல் உஷ்ணத்தை
உயர்த்தி விடு...

இதழ் யுத்தம்
தொடங்கும் முன்னே
முதல் முத்தம் நெற்றியிலே...

சரிந்து விழும்
உன் முடியைக் காதோரம் ஒதுக்கிடவா?

என் இதழால் உன்
அழகை நான் கொஞ்சம் செதுக்கிடவா?

உன் மார்பில்
ஒழிந்திடவே ஒரு
யுகமாய்க் காத்திருந்தேன்...

இது தான் முதலிரவா
முதல் முறையாய்
வியர்த்திருந்தேன்...

நிலவொளியைக்
கடன் வாங்கி
உன் அழகை ரசிப்பேனே...

உன்னாடையைப்
பரிசலித்து நிலவின்
கடனை முடிப்பேனே...

உன் மேனியை
நான் தழுவி ஏழிசையை மீட்டெடுப்பேன்...

அறு சுவையும்
உன்னிடத்தில் ஒருசேர அறிந்திருப்பேன்...

நீ சினுங்கும் ஓசையிப்போ
என் உயிர்க்கூட்டை
உசுப்பிடுதே...

ஈருடலும் ஓருடலாய்
விந்தைகள் செய்து
காட்டிடுதே...

எழுதியவர் : RajSaran (9-Jun-16, 11:28 am)
சேர்த்தது : ராஜ் சரண்
Tanglish : muthaliravu
பார்வை : 511

மேலே