குறுங்கவிதைகள்

குழந்தைகளை
அனுப்பி வைக்கிறோம்
இயந்திரங்களாய்
திருப்பித் தருகிறது
கல்விச் சாலை.
_/ _/ _/

மதக் குப்பைகளை
கிளறி எறிந்தேன்
மனிதன் தெரிந்தான்,
மனிதக் குப்பைகளை
விலக்கிப் பார்த்தேன்
உலகத்தை காணவில்லை.
_/ _/ _/

சீண்டிக் கொண்டேயிருந்தால்
வளர்த்த கடாவும் முட்ட வரும்.
_/ _/ _/

சிந்தையில் தெளிவும் இல்லை
சீரான எண்ணமும் இல்லை
சித்தமெல்லாம் பித்தங் கொண்டு
சிவன் கரம் பற்றுகிறார் பராபரமே.
_/ _/ _/

உறவுகளில் பிளவு
மவுனமாய் வேடிக்கை,
ஊர் கூடும் வேளையில்
பக்கம் சார்ந்து
நியாயம் பேசும் விளம்பரதாரர்கள்,
வேடிக்கை மனிதரல்ல - இவர்கள்
பெற்றோல் ஊற்றும் விஷமிகள். .
_/ _/ _/

எழுதியவர் : கனகசபாபதி செல்வ நேசன் (31-Mar-17, 11:56 am)
பார்வை : 137

மேலே