சிசுவின் தாய்
என் அன்புத்தாய் - இம்
மண்ணில் அவதரித்தாய் - உன்
நினைவில்லை கருத்தாய்...!
வேண்டாததை நினைத்தாய்
சிரித்தாய், கவிழ்ந்தாய்...!
வலையிலே வீழ்ந்தாய்
சுய நினைவிழந்தாய்...!
மனமுவந்தாய், பணிந்தாய்
விருந்தாய், கனிந்தாய்...!
கன்னித்தாய் - தன்மை
இழந்தாய், சுமந்தாய் - பின்
உணர்ந்தாய், அறிந்தாய்
பாவத்தை மறைத்தாய்...!
தொடங்க மறுத்தாய் - அரு
மருந்தாய் குழந்தாய் - என்
உறவை பறித்தாய் - தொப்புள்
கொடியை பிரித்தாய்...!
கருவை கலைத்தாய்...!
எனை அழித்தாய்...!
தூக்கி எறிந்தாய்...! - ஏன்
என்னை வெறுத்தாய்...!
நீயே (பேறு)பெற்றதாய் ...!
- நா. அருள்சிங், சிவந்திபுரம்
*******