உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்

உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்.

உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் அத்தோடும்
அள்ளுதல் உள்ளத்தாலும் தூயதாகட்டும்.
உள்ளம் ஆசு தள்ளிடில்
கொள்ளும் மனதின் தெளிவினில்
துள்ளும் நல்லொழுக்க எண்ணங்கள்.

இல்லத்தில் இந்நிலை உலாவினால்
செல்வங்கள் அடியொற்றும் நிலையாகும்.
நல்ல எண்ணங்கள் அத்திவாரம்.
நல்வழிக்குப் பொய்யறு நிலையுறுதி.
அல்லல்லழிக்கும் உண்மை பேசுதல்.

உயர் குறிக்கோள் உள்ளத்திற்கு
அயர்வற்ற ஊக்கம் தரும்.
துயரற்ற வெற்றியாளர் அனுபவம்
நயமுடன் தேடி அறி.
வியப்புறு வெற்றி பெறுவாய்.

நோக்கம் ஒன்று நிறுவு!
ஆக்கமுடன் குறி நோக்கு!
ஊக்கமாய் நகருதல் அவசியம்!
தேக்கமற்ற ஏக்கம் தயக்கம்
விலக்கியடியெடு வெற்றி உனதே!

மனமே நண்பன் உயர்த்துவான்!
வானம் தொட நினை!
தானாக மரத்திலேனும் ஏறுவாய்!
பின்னோக்கியுனை நீயே தள்ளாதே!
தன்னம்பிக்கை உயரறிவு மனப்பாங்கேயுதவும்!

பா வானதி. வேதா. இலங்காதிலகம். டென்மார்க் 28-3-2017

எழுதியவர் : பா வானதி. வேதா. இலங்காதில (9-Jun-17, 3:51 pm)
பார்வை : 1729

மேலே