என்ன பெயர் சொல்வதோ

பாடி முடித்தது இரவு
ஒரு கவிதை
கனவு என்று பெயர் கொடுத்தேன் !

மெல்ல விரிந்தது
ஒரு காலைப் புத்தகம்
உதயம் என்று பெயர் கொடுத்தேன் !

தேடி வந்தேன்
ஒரு மாலையை நீயும் வந்தாய் !
என்ன பெயர் சொல்வதோ ?

-----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (30-Jun-17, 9:41 am)
பார்வை : 96

மேலே