உண்மையின் வழி

எத்தனை முறை எடுத்துரைத்தாலும் அறிய மறுக்கும் முட்டாள்களின் மனம்...

பணக்காரர்களின் வீட்டின் ஆடம்பரம்.
ஏழைகளின் வீட்டின் தரித்திரம்..
இதுவே இராஜ தந்திரம்...

காந்தி சொன்ன சுயமரியாதை, உழைப்பு என்னும் உயர் கொள்கை கொண்ட யாவரும் நசுக்கப்படுகிறார்கள் இந்த அரசியல் கொள்கையாலே...

பிறரை வஞ்சமாக ஏமாற்றுவதற்கு பெயர் தான் இராஜநீதியோ?
தவறுகளை தைரியமாகச் செய்வதற்குத் தான் உலகநீதியோ??

எழுத்தறிவித்தவன் ஆண்டவன்...
அதைத் திரித்தறிவித்தவன் இந்த மனிதன்...

தனி மனிதனை வாழ விடாது சூழ்ச்சிக்கும் அரசியலையும், அதற்குத் துணை நிற்கும் சமுதாய சுயநலப் பேர்வழிகளையும் அறிகிறேன்...

பணம் தந்த மமதையில்
எத்தனை நாட்கள் வாழ்கிறீர்களென்று நானும் பார்க்கத்தானே போகிறேன் மனித பதர்களே...

என்னைப் போன்றவர்களுக்குள் அணையாது எரிந்து கொண்டிருக்கும் கோபத்தீ நிச்சயம் பற்றி எரிக்கும் கொடியவர்களின் நெஞ்சினை...

உயர்ந்தவன், தாழ்ந்தவன் பிரிவினை மறந்து ஒன்றாகக் கூடி சமுதாயமென சமமாக உழைத்து வாழுங்களென்றால் அதையும் சுயநலமாக்கி அதிலாபத்தை நாடும் உங்களை நிலம் பிளந்து விழுங்கட்டும்...

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (7-Jul-17, 4:30 pm)
Tanglish : unmaiyin vazhi
பார்வை : 671

மேலே