காதல் கனவு

தென்றல் காற்றில் தேகம் சிலிர்க்கும் ஓர் இரவு நேரத்தில்
மங்கை அவளின் மயக்கத்தில் மதியிழந்து கண் மூடினேன்.
தேவலோக தேவதை ஒருத்தி கனவில் வருகிறாள்.
கட்டழகு மேனியவளின் இதழ் அமுதம் பருக
பொற்றாமரை பூமுகம் அருகில் சென்றேன்,
தாமரைக்குளத்தின் மீன்கள் துள்ளிஎழுந்தனவோ
சிதறிய நீர் துளிகள் சட்டென முகத்தில் விழ
நித்திரையில் கனவு கலைந்தது.
பாதி உறக்கத்தில்
பதுமை அவள் மறைந்த சோகத்தில்
கண்விழித்து எழுந்தேன்.அதிர்ந்தேன்.
கனவில் வந்த கன்னியவள் கையில்
தேநீர் கோப்பையுடன் என்எதிரில் நின்றாள்.
கண்ணை நம்புவதா? இல்லை என்னை நம்புவதா?
சிந்திக்கவும் முடியவில்லை!!!,
சித்திர சிலைஅவளை கண்டபின்பு.
வாரியணைத்து வம்பு செய்யவேண்டிய நேரத்தில்,
தினமும் கேட்கும் குரல் ஒன்று சிந்தையை திசை திருப்பியது,
டேய் எரும வேளைக்கு போற எண்ணம் இல்லயா.இன்னும் தூங்கிகிட்டு இருக்க.
அப்பாவின் அன்பு அர்ச்சனைகளுடன் அம்சமாய் விடிந்தது இன்றைய பொழுது.
கனவுகளுடன் *****சரவணக்குமார்*****