உடலும், உயிரும் மகிழும்

இறைவனை தேடும்
விழிகள் இரண்டும்
ஈசனைக் காணாதபோது
இயற்கையின் அழகை
இதயத்துக்குக் காட்டி –இதுதான்
இறைவனெனக் கூறலாம்

செவிகளால் அதுபோல
தெய்வத்தை அறிய
இயலாதபோது
இசையின் வடிவாய்
இறைவனை வணங்கி
புண்ணியம் தேடலாம்

பசுமைநிறக் காடும்,
பகட்டு காட்டி தூதுவிடும்
நீல வண்ணக் கடலும்
வித்தைகள் படைத்து
சிந்தையைக் கவர்ந்து
இழுக்கும்

பாட்டும், பரதமும்
படைப்பதுபோல்
நாட்டியமாடி—மனதை
நாட்டம் கொள்ள வைக்கும்
இயற்கைக் காட்சிக்கு
ஈடேது? இணையேது?

இன்புறும் இதயம்
உற்சாகம் கொள்ளும்,
நல்லதை எண்ணும்
நலம் தேட விழையும்
வாழ்க்கை வளமாகும்
உடலும், உயிரும் மகிழும்.

எழுதியவர் : கோ. கணபதி. (26-Jul-17, 4:29 pm)
சேர்த்தது : கோ.கணபதி
பார்வை : 140

மேலே