ஆழிசை என்றவள்


நான் எப்போதும்
நீ தான் அழகுயென்பேன்
இப்பிரபஞ்சத்தில்

என்னை விட
எது அழகுயென
வினாக்களால் துளைக்கிறாய்
அவ்வபோது

நீ தந்த இந்த காதலை விட
எது அழகாக இருந்து விட முடியும்
நீயே சொல் ஆழிசை

பாரதி நீரு...

எழுதியவர் : பாரதி நீரு (18-Sep-17, 7:27 pm)
பார்வை : 74

மேலே