ஈடுஇணையற்ற வெகுமதி

வீழ்வதெல்லாம் வீழ்ச்சியுமல்ல...
உயர்வதெல்லாம் உயர்வுமல்ல...
இழப்பதெல்லாம் இழப்புமல்ல...
பெறுவதெல்லாம் நிரந்தமாக தங்குவதுமல்ல...

எதற்காகவும் பதறாதே...
வாழ்வில் தாழ்ந்தாலும் அன்பின் பாதைவிட்டு தாவாதே...
அன்பின் வழி நடக்கத் தயங்காதே...
அன்பை மதிக்கத் தவறாதே...

கருணையை இதயத்தில் ஏற்று...
உனது துயரங்களுக்கு உன்னோடு இல்லை பற்று...
உன்னிலிருந்து எங்கும் வீசட்டும் ஆனந்தக் காற்று...

அமைதி உன்னில் குடிகொண்டால் அதை விட வேறில்லை நீ பெறவேண்டிய வெகுமதி...

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (18-Sep-17, 10:58 pm)
பார்வை : 935

மேலே