நொறுங்கிய இதயங்கள்

காதல் என்ற மூன்றெழுத்தில் ,
உலகம் என்ற நான்கெழுத்து ,
இயங்குகிறது ......
ஆனந்தம் என்ற சொல்லையே
என் அகராதியிலிருந்து
நீக்கிவிட்டாயே .....
அன்பே !!!
உனக்கு ,
ஏன் இவ்வளவு அவசரம்
என்னை விட்டு நீங்குவதற்கு ??

எங்கு சென்றாலும்
உன் நினைவுகள் !!!
எந்த பொருளை பார்த்தாலும்
உன் நியாபகங்கள் !!!
இந்த கல்லூரி முழுவதும்
உன் காலடி
பதித்த தடங்கல் !!!
இவையனைத்தும் ,
உன் இனிய ஞாபகங்களை
உணர்த்தும் அடையாளங்கள் !!!
நீ ........
என்னை விட்டு சென்றாலும்
உன் நினைவுகளை,
என்னிடம் இருந்து
உன்னால் கூட பிரிக்க முடியாது !!!

எழுதியவர் : ப.பூமா (28-Sep-17, 12:50 pm)
பார்வை : 385

மேலே