நெஞ்சு பொறுக்குதில்லையே

நெஞ்சு பொறுக்குதில்லையே !!

ஒற்றுமையில்லா உலகினில்
பற்றில்லா பந்தங்கள் !
சற்றேனும் சிந்திக்காத
சண்டையிடும் சமுதாயம் !
நெற்றியிலே வியர்வையினை
நேர்வழியில் சிந்தாது
மற்றைவழிச் செல்வத்தால்
மங்கியதோர் மக்களினம் !!

ஆக்கம் :- சரஸ்வதி பாஸ்கரன்

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (4-Nov-17, 12:15 am)
சேர்த்தது : sarabass
பார்வை : 85

மேலே