காத்திருப்பு
திசைமாறிப் போனவளே!
உன் விழிவழிப் பாதையிலே...
வீடுவரை வந்தவன் நான்
வீதிவரை வருவாயோ?
வருவேன் என்ற நீ
வழிமாறிப் போய்விட்டாய்...?
வாழும்போது வருந்தும் நீ
வீழந்த பிறகாவது....
வருவாயா?
வருவாய் என்பதால்தான்
வழிமறந்து நிற்கின்றேன்...
திசைமாறிய நீ ....
திரும்பி வருவாய் என்று....
காலமெல்லாம்
காத்திருக்கும்
உன்னவன்.