எனையாளும் தேவதையே

எனையாளும் தேவதையே.
**************************************
விழியிலே என் விழியிலே
கருவாய் வீழ்ந்தவள் நீயடி...
கனவிலும் என் நினைவிலும்
காதலாய் மலர்ந்தவள் நீயடி.....

சிரிப்பாள் என்னை சிதைத்தவளே
புதுக்கவியாய் என்னுள் பிறந்தவளே
பார்வை அம்புகளால் பாதி உயிரைப்பறித்தவளே
என் விழிமுழுதும் அழகாய் உன்னை விதைத்தவளே....

உலகம் அறியா என் உண்மைக்காதலியும் நீயே
என் உயிரை சுமக்கும் அழகிய தேவதையும் நீயே
நொடிக்கொருதரம் உன்னை நினைக்கிறேன் நானடி
விதி என்று எனைப்பாராமல் போகிறாய் ஏனடி....

இறங்காத உன் நெஞ்சம்...?
உன் நினைவில் துடிக்கும் எனக்காய் கொஞ்சம்.

எழுதியவர் : இர்பான் அஹ்மத் (14-Nov-17, 4:34 pm)
பார்வை : 387

மேலே