பூவுக்குள் போர்க்களம்
மலர்கள் என்ற போர்வைக்குள்
கழுத்தில் முட்களினை சூடிக்கொண்டு
குருதியினை சிந்தினாலும்
பிறர் சிரித்திடாமல் காப்பதற்க்கு
புன்னகைத்த முகமேற்று
கட்டப்பட்ட கைகளுடன்
காலம்தொட்டு பயணிக்கும்
சிறைவாசம் தானோ
இந்த மண வாழ்க்கை ?
-திவ்யா சத்யப்ரகாஷ்