ஓ இறைவா

ஓ! இறைவா,
எனக்கு கற்றுத் தா,
நான் அறியாத, தெரியாத வித்தைகளை...

ஓ! இறைவா,
எனக்குத் தெளிவாகக் காட்டு,
எந்த வழியில் நான் எங்கே செல்ல வேண்டுமென்பதை...

தனியாக நான் போராடுகிறேன்...
தனியாக நான் விழுகிறேன்...
ஆனால், உன்னுடைய மரியாதைக்குரிய குரல் வழிகாட்டுகிறது எல்லாவற்றின் வழியிலும்...

என் கையைப் பற்றிக்கொள்...
என் வழியை ஒளிமயமாக்கு...
இரவு, பகலாய் என்னோடு பிரியாது இருந்திடு...

நான் பலவீனமாக இருக்கிறேன்...
சில நேரங்களில் துவண்டு விழுகிறேன்...
ஆனால், நீ எனக்கு பலம் தருகிறாய்...
என்னை முழுமையாக்குகிறாய்...

ஓ! இறைவா,
தாய்,தந்தையானவனே,
எனக்கு கற்றுத் தா...
உனது குழந்தை நான் புதுமை அடைகிறேன்...
நீயின்றி நானென்பது இல்லை...
அதனால், உனக்காக நான் வாழ்கிறேன்...

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (27-Nov-17, 9:38 pm)
Tanglish : o iraivaa
பார்வை : 1121

மேலே