பெண்மை
பெண்மை
தனித்தியங்கும் தன்மை வளர்த்து................
தன்னம்பிக்கையின் வடிவமாதல் நல்லதே
கவனமுடன் காரியங்கள் கையாண்டு...........
கண்ணியத்தின் வடிவமாதல் நல்லதே
அக்கறையுடன் ஆராய்ந்து நடந்து.............
அறிவுத்தெளிவின் வடிவமாதல் நல்லதே
இனியசொல்லுடன் இயல்பாய் இருந்து.............
இயற்கையின் வடிவமாதல் நல்லதே
பொறுமையின் பெருமை உணர்ந்து
பெண்மையின் வடிவமாதல் நல்லதே
இதுவே தரம் ..........இதுவே நிரந்தரம்.......