அவள் தான் என் உயிர்

உப்பு காத்து மீனவனுக்கு உசுரு தருதுடி
ஊத்து தண்ணி விவசாயிக்கு உசுரு தருதுடி
சித்த நேரம் நீ பேச என் ஜீவனுக்கு உசுரு தருது "டி"
மத்த நேரமெல்லாம் ஆசையா நீ பேசும் அடுத்த
வார்த்தைக்காக இதயம் விக்கி கிடக்குதுடி !!!

இருண்ட ஏன் வாழக்கைக்கு வெளிச்சத்தை
தர முடியாத மின் துறைக்கு மத்தியில
இந்த பெண் துறை தீண்ட எரியுதுடா இறைவா !!!!

ஊனமடைஞ்ச என் வாழக்கை சாலையை
இவ வந்து சீர் படுத்தி சரி செஞ்சா.....

என் வாழ்க்கை புத்தகத்துல
ஆனந்தம் என்கிற ஏடு ஒன்னு கிழிஞ்சு !!!!!!!!!!
காத்தோட காத்த போச்சுடா அது மறைஞ்சு............
கிழிஞ்ச ஏடு தான வந்து ஓட்டிகிச்சுட
கிளி போல பொண்ணு ஒன்னு என் உசுரோடதச்சுகிச்சுடா .......

மெல்ல மெல்ல கரம் பிடிச்சு ஏத்தி விடுற
பள்ளத்துக்குள்ள விழுந்து பழுதடைஞ்ச
என் வாழ்க்கையை...............

கோண மாணலா என் வாழ்க்கையை
இறைவன் கிறிக்கிட்டான் பேணா மையால..................
இடையில வந்து கிடையில கிடந்த என் வாழ்க்கையை இவ எடுத்து
திருத்திட்ட பெண் மையால ...................

என் வாழ் நாள் அத்தனைக்கு ஆசை
இவளோடு மட்டும் சேர்ந்து வாழ ....................
இவை இல்லாம வாழ்ந்த எறும்பு
நிழல்கிட்ட கூட நான் ஆயிடுவேன் கோழ !!!!!!!!!!

எழுதியவர் : ராஜேஷ் (18-Dec-17, 7:25 pm)
சேர்த்தது : ராஜேஷ்
Tanglish : aval thaan en uyir
பார்வை : 379

மேலே