இலக்கணமடி நீ எனக்கு

பெண்ணே உன்னைப்பார்த்தேன்
உன் அழகை ரசித்தேன்
உன் விழிகளின் காந்த ஒளி கற்றைகள்
என்னை உன் வயப் படுத்தியதோ
தெரியாது -ஆனால் ஒன்று மட்டும்
சொல்வேன் உன்னழகு என்னை
உந்தன் தாசனாக்கியது, உன்
அழகைப் பாடும் கவிஞனாக்கியது
'கழுதைக்கு தெரியுமோ கற்பூர வாசனை'
என்றிருந்த என் மனதில் கவிதை
வரிகளைத்தந்து காதல் கவிதை
எழுத வைத்தது ; நீ அழகின் இலக்கணம்
நான் அதை நாடி படிக்கவந்த
புது கவிஞன் , இப்போதுதான்
அந்த இலக்கண புத்தகத்தின்
பக்கங்களை புரட்டி பார்க்கின்றேன்
உன்னை, இல்லை உந்தன் இலக்கணத்தைப்
புரிந்துகொள்ள

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (25-Dec-17, 7:55 am)
பார்வை : 224

மேலே