அவள்

வெண்ணிலவு வட்டமானது-நீ
முகம் பார்க்கவே..
மேகங்கள் சூரியனை மறைத்து
உன் நிறம் காக்கவே..

தென்றலும் கடலை கடந்தது
நீ சுவாசிக்கவே..
பூக்கள் பூமியில் விழுந்தது
உன் பாதம் சேரவே..

மழைநீரும் மண்ணில் கொட்டியது
உன்னை நனைக்கவே..
வானவில் வந்தது
உன் உடை மின்னவே..

மல்லிகை மணக்குது-உன்
கூந்தல் சேரவே..
விண்மீன்கள் மிதக்குது-உன்
விழிகள் காணவே..

குயில் இசைத்து-உன்
குரல் ஓசை கேட்கவே..
மயிலும் ஆடுது-உன்
வரவை கூரவே..

எழுதியவர் : அஸ்வந்த் (7-Jan-18, 10:38 pm)
Tanglish : aval
பார்வை : 259

மேலே