பொங்கலோ பொங்கல்
மஞ்சள் குழை
மயக்கத்தில்
மந்திர புன்னகை
மண்பானை பொங்கல்
பொங்குதம்மா!!!
மார்கழி பிரசவத்தில்
தைப் பிறந்ததம்மா
தையல் நாயகி
அருள் கிடைத்தம்மா!!!
ஆடிப்பட்டம் தேடி
விதைத்த விதை
பக்குவமாய்
அறுவடை ஆனதம்மா !!
உழவன் வியர்வை கண்டு
கொதித்த சூரியனும்
அவன் சிரிப்பில்
பிரகாசிக்குமம்மா!!!
கூடி மகிழ்ந்து
மதம், இனம் மறந்து
பொங்கட்டும் பொங்கலம்மா!!!
- மூ.முத்துச்செல்வி