ஜல்லிக்கட்டு

மந்தையில் மலர்ந்த கன்று
கொம்பு புடைக்க வளர்ந்தது
புல்லை தின்று பூத்ததோ
காளையாய்

வாடிவாசல் திறக்க
வாடிய பொழுதெல்லாம்
தள்ளியே போய்நின்று
திறந்ததம்மா கதவங்கு

அழங்காநல்லூர் பெருமை
காளை கொம்பில் அனல்பறக்க
வேட்டைக்கு சிங்கங்கள்
தள்ளாடி நின்றன
காளையின் காலடியில்

ஜல்லிக்கட்டு வீரம்
தமிழனின் வீரக்கூத்து
அதை சிதைக்கச் செய்யும்
மனக்கதவை இழுத்து சாத்து

எழுதியவர் : ப.இளவரசன் (23-Jan-18, 6:23 pm)
சேர்த்தது : vasanedy
Tanglish : jallikkattu
பார்வை : 75

மேலே