முதுமொழிக் காஞ்சி 4
குறள் வெண்செந்துறை
ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம்
வண்மையிற் சிறந்தன்று வாய்மை யுடைமை. 4
சிறந்த பத்து, முதுமொழிக் காஞ்சி
பொருளுரை: செல்வத்தினும் மிக்கசிறப்புடைத்து மெய்யுடைமை.
(ப-ரை.) வாய்மை உடைமை - உண்மையுடைமை, வண்மையின் - செல்வமுடைமையைக் காட்டிலும், சிறந்தன்று -சிறந்தது.
வண்மையை ஈகையென்று கொள்வதுமாம்.
செல்வத்தால் ஆகும் நன்மையைக் காட்டிலும் வாய்மையால் ஆகும் நன்மை சிறந்தது.
'யாமெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும்
வாய்மையின் நல்ல பிற.' 300 வாய்மை, திருக்குறள்
'வளமையிற் சிறந்தன்று' - பாடபேதம்.