எதுடா முன்னேற்றம்

எதுடா முன்னேற்றம்?
அழிவுக்கான ஆயுதங்களை கோடிக்கணக்கில் வாங்கி, உருவாக்கிக் குவிப்பதா?
அது தான் உங்கள் முன்னேற்றம் என்றால் நான் உங்களைச் சார்ந்தவன் இல்லைடா...

விண்வெளி ஆராய்ச்சியில் என்னதான் எல்லை தாண்டிச் சிந்தித்தாலும் இந்த உலகத்திற்குள் முள் வேலிகளுக்குள் நாடுகளுக்கு எல்லையிட்டு வாழும் நாம் இன்னும் முன்னேற்றமடையவில்லை...

நிலத்தில் மட்டுமா முள்வேலியிட்டாய்!
மனதிலும் தானடா முள்வேலியிட்டாய்!

மதம் பீடித்த மாந்தர்களால் எம்முடைய நாட்டு மக்கள் இரு நாடுகளாகப் பிரிந்த நாளையும் நான் கொண்டாடுவேனோ?

குடியரசு? என்ன குடியரசு?
குடிகாரர்களை வளர்த்து விடும் குடியரசு.
கொள்ளைக்காரர்களை அரவணைக்கும் குடியரசு.
பணத்திற்கு விலை போகும் மக்களைக் கொண்ட குடியரசு.
வேஷம் போடும்,
வெறும் பெருமைக்குக் கொண்டாடப்படும் குடியரசு.

ஆட்டு மந்தைகளே!
கொடியேற்றி இனிப்புத் தின்றீர்களா?

தேசியக் கொடியில் உள்ள அர்த்தத்தை வாழ்க்கையில் கடைப்பிடிக்காமல் கொடியை மட்டும் வருடம் இருமுறை ஏற்றுகிறார்கள் போலி வேடமிடும் இந்தியர்கள்.
இதில் தமிழர்களே சிறந்த ஆட்டு மந்தைக் கூட்டம் என்ற விருதைப் பெற தகுதியானவர்கள்.
இவ்விருதை வழங்குவதில் பெருமைப்படுகிறேன்...

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (26-Jan-18, 12:11 pm)
பார்வை : 1226

மேலே