கல்லறை உடலுக்கு மட்டும்தான்

நெஞ்சுக்கூட்டில்
துடித்த இதயம் - இன்று
கல்லறைக்கூட்டில்
உறங்குகிறது..!

அறிவிப்பில்...
பிறந்த தேதி சரிபட,
இறந்த தேதியில்
நீ பிரிந்த
தருணத்தின் பிழை!
யாரறிவார் உனைத் தவிர...

கட்டிய செங்கல் சிறையில்
உயிரறுந்த ஊனுடலாய் நான்!
நம் உறவு மட்டும்...

சுற்றும் காற்றில் நினைவுகளாய்...
நகர்ந்த நிமிடங்களில் காதலாய்...
எழுதிய காகிதத்தில் கவிதையாய்...
உன் மனதில் மட்டும் மறதியாய்..!
அனாதைப் பிள்ளைப்போல்
அழுது துடிக்கிறது நாமில்லாமல்!

எழுப்ப வேண்டும்
அதற்குமொரு கல்லறை
எனதருகில்!!!

எழுதியவர் : யாழ்வேந்தன் (19-Feb-18, 5:53 pm)
பார்வை : 872

மேலே