உன் விழி
துள்ளி வரும் வேல் வீச்சு பார்வை,
தள்ளி நிற்கிறேன் துணிவின்றி★
பள்ளி பாடம் நான் நடத்துவேன் நானுனக்கு,
பள்ளியறை பாடம் நடத்துவாய் நீயெனக்கு★
செல்லிடம் எங்கும் உன்நினைவே பொங்கிடும்,
கொள்ளிடம் சேர் காவிரியாக அடங்கிடுமே உனைக் கண்டதும்★
மின்சாரம் தடை ஆவது பற்றி எனக்கு ஏதும் கவலையில்லை,
சம்சாரம் ஆகி நீவந்து உனைத் தொட
மின்சாரம் உருவாகுமே!★