எனது அம்மாவிற்கு
தயங்கி தயங்கி வாழ்ந்தோம்
தானம் ஏந்தி அன்பில்..
பதினொரு வருடம் சென்றது
தாய் பிரிவால் மட்டும் அல்ல...
பந்தம்... பாசம்...பகை...
தோல்வியில்...
ஏமாற்றமும் தொல்லையும்...
எத்தனை தோற்றம்
மனிதர்கள்
பச்சோந்திகளாக..
ஒவ்வொறு
வலி மறைவில்
மற்றொரு வலி...
நானா...நீயா...
போட்டியுடன்....
வலிகள் மாயமானது
காயங்கள் காரணத்தில்
கண்ணீரோடு மிதக்கிறது
மூவருக்கும்...
வலிகளின் மருந்தும்
வழி காட்டும் மருந்தும்
அவனே...
தாயின் மறுபிறவியாக
எங்கள் உயிராக வந்தவன்
அவனே...
தமையன் தோற்றத்தில்
தாயாக வந்தவன்...
தாயே எங்களை வழி நடத்தி வழிகளை நீக்க வா..தாயை விட எந்த உறவும்
ஈடாகா..புரிந்து கொண்டேன்...எங்களோடு ஒரு வாழ்க்கை வாழ வா அம்மா...