என் தாய்

கருப்பையில் சுமந்து என்னை
எனக்கே தந்தாய்.....!!!
பாவி என் சேட்டைக்கு
பாசம் தந்தாய்......!!!
பச்சிளங் காலங்களில்
பாடல் தந்தாய்.....!!!
வலியென்று துடித்தேன்
உயிரைத் தந்தாய்......!!!
சினம் வந்து பேசினாலும்
சிரிப்பை தன் தந்தாய்.....!!!
வார்த்தைகளை கண்ணீரில்
வடித்து தந்தாய்....!!!
உடலனைத்தும் எனக்கு
உணவு தந்தாய்....!!!
உணவுடன் சேர்த்து
முத்தம் தந்தாய்....!!!
என் வாழ்வு நலம் பெற
கல்வி தந்தாய்....!!!
தினமும் என்னில் வாழும்
நீ தான் என் தாய்...!!!!!

எழுதியவர் : பாக்கியராஜ் (16-Mar-18, 1:27 pm)
Tanglish : en thaay
பார்வை : 641

மேலே