கிங்காங் காதல்

இரக்கமில்லா உடம்பினில்
இதயம் என்பது எதற்கோ..!
அரக்கனாக வாழ்கிறார்கள்
ஆறறிவு ஜீவன்கள்..!

காவியம் தந்த காதலெல்லாம்
கரையான்கள் தின்றிடுச்சோ..!
காதல் என்ற புனிதத்தை
காணாத கூட்டம் இது..!

அலையில் மிதக்கும் கப்பல்
ஆகாயத்தில் பறக்காதோ..!
காட்டில் வாழ்ந்த எனக்கு
காதலை சொல்ல தெரியலயே..!

உண்மையான காதல்
உலகத்தில் வாழாதோ..!
கண் இல்லாத காதலுக்கு
கருணையும் இல்லையே..!

மனதில் பூத்த காதலை
மரணத்திற்கு இரையாக்குகிறேன்..!
மறந்துவிடாதே என் உயிரே
மறுஜென்மத்தில் மனிதனாகிறேன்..!

சொல்லாத காதலை
சொல்லினால் புரிய வைக்கிறேன்..!
இல்லாத இரக்கத்தை
இந்த உலகிற்கு கற்றுத்தருகிறேன்..!

இல்லாத இரக்கத்தை
இந்த உலகிற்கு கற்றுத்தருகிறேன்..!!!

எழுதியவர் : ந.இராஜ்குமார் (21-Mar-18, 8:59 pm)
பார்வை : 294

மேலே