காவிரி

ஆதி தமிழ்முனிவன் கொணர்ந்த
கமண்டல நீர்..இன்று
கானல் நீராய் போனதென்ன.
பாராளுமன்றமும் பாராபட்சம் பார்பதென்ன.

வீதிதோறும் நாடகங்கள் போலியான போராட்டங்கள்.
எங்கள் அவதியில் அரசியல் லாபம்தேடும்,
எச்சத்தில் புரளும் பன்றிக் கூட்டங்கள்.

இராசராசனும் காமராசனும் இந்நேரம்
இருந்திருந்தால், பாரதப்போரே நிகழ்ந்திருக்கும்.
நீர்பாசனம் குறையின்றி நடந்திருக்கும்.

காவிரி தாயே!
உன்னை அரவணைத்திட கல்லணை காத்திருக்கு.
உன்மக்கள் துயர்நீக்க கட்டவிழ்த்து
அணை உடைத்து, காட்டு வெள்ளமாய்
கரைபுரண்டு..கருணைக்கொண்டு
ஓடோடி வா! அன்னையே!

எழுதியவர் : கார்த்திக் (6-Apr-18, 1:08 pm)
பார்வை : 72

மேலே