மக்களாட்சியில் மாயதோற்றங்கள்

மயாத்தோற்றங்கள்
மதிகலங்கியதால்
வருகிறதோ?
வாக்களிப்பதால் மட்டுமே
ஜனநாயகத்தை
நிறைவேற்றிவிட்டேனென..
அரசியல் சாசனங்கள்
காசில்லாமலே
உரிமைகளை
என் வாசலில்
வைத்துவிட்டு போகுமென...
நீருக்கு கூட
எரிமலைகுழம்பை
தலையில் அள்ளி கொட்டினாலும்
ஏதோ?
அரிக்கிறது என்று
சொரியக்கூட யோசிக்கும்
ஆட்சியாளர்களின்
மாட்சிமை வாழவைத்திடுமென...
இல்லை எல்லாம் கலங்கிய
மக்களாட்சியில்
இப்பொழுதுதான்
தெளிகிறதோ..?
என்னையும் சேர்த்து
என் மக்களின்
அகக்கண்கள்..

எழுதியவர் : சுரேஷ் குமார் (12-Apr-18, 9:10 pm)
சேர்த்தது : சுரேஷ்குமார்
பார்வை : 235

மேலே