அன்பு மகள் ஆசிபாவிற்கு,

#justiceforasifa

கள்ளிப்பாலுக்கு
கரு சிசுவை
கலைத்தாய்!

பள்ளிப் படிப்பை
பருவத்தில்
பறித்தாய்!

மங்கையரை
மாமிசமாய்
மரித்து திண்றாய்!

பச்சிளம் பிள்ளையன்றோ?
பால் முகம் மாறா பிள்ளையன்றோ?
பாதகன், அவன்
பிணங்களை விழுங்கும்
பிடாரியோ?
அன்று அவள்
கதறிய ஓலம்
தாய்மை மறக்குமா?

ஆகாயம் பிரிந்து அவனை வதைக்குமோ?
இல்லை
பாதாளம் பிளந்து அவனை விழுங்குமோ?

இறக்கும் தருவாயில்,
உறுப்புகள் செல்லரித்து..
நரம்புகள் உணர்வற்று..
ஈன்ற தாயின்,
இறுதி கண்ணீர் துளிகளில்
உயிர் பிரியட்டும்!

அவன் மீண்டும் பிறக்க..
அப்பிறப்பில்,
நல்லதோர் தந்தையாய்
வாழ்வில் திகழ்ந்து
அவன் பாவம் தீர்க்க
சபிக்கிறேன்!

மதமற்று..
மொழியற்று..
இனமற்று..
மனிதர்களை,
மணங்களோடு பாருங்கள்,
உணர்வுகளை பகிருங்கள்!

அன்பு மகள் ஆசிபாவிற்கு,

எங்களுக்கு அழுது பழகி விட்டது,
எங்கள் மானிட மந்தை கூட்டத்திற்கு
நல்லதோர் நீதி தேவதை
வகைப்படவில்லை..
அஃது நடப்பின்,
மீண்டு வா எங்கள் பூமகளே!

எழுதியவர் : மாலதி ரவிசங்கர் (16-Apr-18, 9:43 pm)
சேர்த்தது : மாலதி ரவிசங்கர்
பார்வை : 297

மேலே