வரம் நீயே

உன்னை பற்றி கவிதை சொல்ல
வரிகளும் இங்கே நீளமில்லை !

வானத்தை வரியாய் செய்தாலும்
அதன் நீளமும் இங்கு போதவில்லை !

நட்பினை நல்ல விதையாக்கி
புது பொலிவுடன் என்னை நீ தந்தாய்...

காதலில் இன்பம் மட்டும் அல்ல - அதில்
துன்பமே அதிகம் உள்ளதென ,

கனிவுடன் எனக்கு கருத்தளித்து
என் கவலைகள் துறந்திட நீ செய்தாய் ....

உன் குழந்தை செயலில் என்னை கவர்ந்த கள்ளி நீயே.......

உன் இசையின் அழகில் மயங்கி விழுந்து தவிக்கிறேன் பெண்னை...

கவிதை வேறு நீ வேறு அல்ல
என் கவிதையின் முகவரி நீயன்றோ .

கவிதை என்றுமே அழகுதான் - அந்த
கவிதைக்கு அழகி தோழி நீயன்றோ ...

உன்னை கண்டு என் கவிதை அல்ல
உன் மனதை கண்டே என் கவிதை ....

நீ மலர்களில் அரிய (குறிஞ்சி) மலர்
முழுமதியில் நீ என்றும் (வளர்மதியே )....

என் காதலி எனக்கு இரண்டாம் பட்சம்
என் தோழி உன் ஒருத்தி முன் மட்டும் ....

உனது கோபத்தில் கூட உன் கண்கள் எனக்கு அன்பினை சொல்லியது.......

நீ என்னை பார்க்காமல் இருந்தாலும் என் விழிகள் உன்னை தேடியது உன் அன்பே எதிர்பார்த்து........

கவிதைக்கு உவமையாய் இயற்கையை சொல்வேன்,
இயற்க்கைக்கு உவமையாக உன்னைவிட யாரை சொல்வேன்.

தோழி இன்னொரு தாய் என்பேன் - எனது
தாயை உன்னிடம் கண்டதினால்,

வேறு ஏதும் என்னில் வேண்டாம் என்பேன்
உயிர் போகும்வரை தோழி நீ உடன் இருந்தால்..

சில வரியினில் முடிக்க நினைத்தாலும்
முழுதாய் என்னால் முடியவில்லை ,

என் கவிதையின் முடிவுரை எழுதிவிட்டேன்
உன் பொருளுரை மட்டும் எதிர்பார்த்து................

எழுதியவர் : பா.பிரசாத் குமார் (23-Apr-18, 9:35 pm)
சேர்த்தது : prasath kumar
Tanglish : varam neeye
பார்வை : 51

மேலே