மனிதனைவிட மண்சுவர் மேல் -கங்கைமணி

ஒண்டியும் அண்டியும்
பிழைப்பு நடத்துவது
மனிதர்கள் மட்டுமல்ல ,
இதோ இந்த ஆடுகளும்தான் !
இங்கே மிருகம் யார் ???!
அடைந்து கிடக்கும் ஆடுகளா,இல்லை
அடைத்துவைத்த மனிதனா ?!.
மிருகவதை சட்டம் ,சில
மனிதமிருகங்களுக்கு-
இல்லையோஎன்னவோ?!
மனிதா...!
உணவாகப்போகும் உயிரென்றாலும்,அதற்கும்
உணர்வுண்டு வதைக்காதே!.
மனிதா...!
வாடிய முகத்தை உற்றுப்பார்-
வதைக்கும் உன்னை வைவது தெரியும்.
மனிதா உன்னைவிட,இந்த
மண்சுவர் எவ்வளவோ மேல்.
-கங்கைமணி