உன் மை பூசிய விழிகளானால்

இலட்சம் பொய்கள் சொல்லடி

எண்ணிலடங்கா தர்க்கம் செய்யடி

எத்தனை முறை வேண்டுமானாலும் உதாசீனம் செய்யடி

கட்டுக்கடங்கா கோபம் கொள்ளடி

தான் தானென்று தற்பெருமை கொள்ளடி

நீ என்ன செய்தாலும் மீண்டும் வேண்டுவேன்,

இவை அனைத்தும் செய்வது உன்(ண்) மை பூசிய விழிகளானால்.

எழுதியவர் : தாமரைக்கனி (2-May-18, 4:19 pm)
சேர்த்தது : தாமரைக்கனி
பார்வை : 205

மேலே