முதுமை
தவம் இருந்து உன்னை
பெற்றேன்.
என் கனவுகள் முழுவதும் நீயென
வாழ்ந்தேன்.
தகுதிக்கு மீறி உன்னை
வளர்த்தேன்
உன் கண்களில் கண்ணீர் துளிகள்
இல்லா வாழ்க்கை தந்தேன்
என்னை முதியோர் இல்லத்தில் சேர்த்தாயே
என் கண்ணீர் துளிகளுக்கு காரணம்
நீயே
என் வாழ்வில் கடைசி நாள்
என் இறுதி ஊர்வலத்திலாவது
கலந்து கொள்ள நீ வருவாயா