நதியே

பனித் துளி காலத்தில்
வெண்ணிலாவின் வெளிச்சத்தில்
நீல நிற ஓடையில்
சிறு நட்சத்திர பூக்களை போல
அலங்கரித்து கொண்டு
பெண்மையின் நடையினிலே
அவள் மௌனப் புன்னகையில்
நடந்துவரும் அழகை உன்னில் கண்டனே !
அலையாய் வரும் உணர்வுகளுக்கு
உயிர் கொடுத்து வரும் பெண்ணின் சங்கீதமே !
உன்னை வர்ணிக்க வார்த்தை தேடி
தோற்றுப் போனேன் நான் நீர்துளிகளாய்
தோற்றுப் போகாதது உன்
மைத்துளிகள் மட்டும் தான்
மையாய் உருமாறி அச்சாக
வெளியாகி பேரின்ப நளினத்திலே
காவியம் படைக்கும்
உன் அதிசயத்தை
கண்டு கொண்டேன் !!!!!!

எழுதியவர் : ஹ.தமிழ்செல்வி (4-Jun-18, 1:53 pm)
சேர்த்தது : Tamilselvi
பார்வை : 219

மேலே