சத்தம் போடாதே

அவளைப்
படுக்கை அறைக்கு அழைத்தது - சற்று
தயக்கமாகத்தான்
இருந்தது

திருப்பங்களின் நடுவே
புரட்டும் வேலையில் வரும்
சத்தங்கள்
மென்மையைச் சிந்திக்க வைத்தன

ஒவ்வொன்றையும்
ஆராய்ந்துப் பார்ப்பதில்
நிமிடங்களின் கரிசனை
வேகத்தின் உச்சியில் தவழ்ந்தது

இப்போது மணி
பன்னிரண்டு

புத்தகத்தை மூடி வைத்துவிட்டு
தூங்கிவிட்டேன்....

எழுதியவர் : மு.கவியரசன் (24-Jun-18, 8:41 pm)
சேர்த்தது : முகவியரசன்
Tanglish : sattham podaathe
பார்வை : 139

மேலே